• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு

March 19, 2018 தண்டோரா குழு

சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. கடந்த அக்டோபர் மாதம் தனது கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் சசிகலா பரோலில் வெளிவந்தார்.

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது.

இதற்கிடையில்,  நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.ஆனால், சசிக்கலாவிற்கு பரோல் வழங்க
சிறைத்துறை மறுத்துள்ளது.

அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க