• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடகா சிறைத்துறை மறுப்பு

October 3, 2017 தண்டோரா குழு

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறையில் இருக்கும் சசிகலா, கவலைக்கிடமாக உள்ள தன் கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதனால் கணவரை பார்க்கச் செல்ல சசிகலாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், பரோல் பெறுவதற்கு சசிகலா தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பரோல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சிறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் சான்று அதிகாரியின் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை இணைக்கவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க