• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி

June 18, 2025 தண்டோரா குழு

கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை  50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது.இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது.

கௌசிகா நீர்க்கரங்கள் இந்த திட்டத்தில், வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரையிலான 6 கி.மீ.,தூரத்திற்கு, கௌசிகா நீர்க்கரங்கள், ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கான விரிவான திட்ட அறிக்கை,தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுப்புற சூழல் மற்றும் சமுதாய ஒத்துழைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில்,ரோட்டரி கிளப் 3201 மேம்பாட்டு குழு உறுப்பினர் குழு தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசியதாவது :-

கௌசிகா நதி குறித்து இதுவரை நாம் அதிகம் கேட்டதில்லை.சமீபத்திய மாதங்களாக தான் கேட்டு வருகிறோம். கௌசிகா நதி மேம்பாடு குறித்து பேசி வருகிறோம். இந்நதி மேம்பாட்டுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இது தவிர, புறநகரங்களிலும் நாங்கள் ஏராளமான பணிகளை செய்து வருகிறோம். குளங்கள், கண்மாய்களை மேம்படுத்தி வருகிறோம்.விருதுநகர் முதல் ராமநாதபுரம் வரை சுமார் 1,400 கண்மாய்களை மேம்படுத்தி வருகிறோம். அனைவரும் ஒருங்கிணைத்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்து பேசும் போது :-

கௌசிகா நீர் கரங்கள் மூலம், கௌசிகா நதி  புனரமைப்புத் திட்டம் மொத்தம் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டுள்ளது. அதற்காக இதுவரை சேகாரமான நிதி போதுமானதாக இருக்காது.மார்ட்டின் டிரஸ்ட் மூலம் திருமதி லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களால் இன்று வழங்கப்பட்டிருக்கும் 50 லட்சம் ரூபாய், துவக்கத்தில் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் ஆகியவை பெரும் பயனுடையதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது.மிகுந்த நன்றியை அவர்களுக்குத்  தெரிவிக்கிறோம்.

மேலும் இதில் செல்வராஜ் அவர்களின் தள ராத இடைவிடாத களப்பணியும்  மிகவும் போற்றுதலுக்குரியது.அவருக்கும் எங்கள் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

ஆறுகளை புதுப்பிக்கவும், தண்ணீரை சேமிப்பதிலும் கடந்த 15 ஆண்டுகளாக கௌசிகா நீர்கரங்கள் அமைப்பை உருவாக்கி திரு செல்வராஜ் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு, நீர்நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.

ரோட்டரி மாவட்டம் 3201, இந்த அமைப்புடன் இணைந்து நீண்ட கால அடிப்படையில் காட்டு பண்ணாரியம்மன் கோவில் முதல் தேவனாம்பாளையம் தடுப்பணை வரை 20 கி.மீ., தூரத்துக்கு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 6 கி.மீ., தூரத்துக்கு எவ்வாறு கால்வாய்களை தூர் வாருவது மற்றும் சுற்றுச் சூழலை மீண்டும் கொண்டு வர கவனம் செலுத்தப்படும்.

புதுப்பிக்கும் இந்த திட்டம் மட்டுமின்றி, நீரோட்டத்தை மேம்படுத்தவும், தண்ணீரின் தரத்தை உயர்த்தவும், நிலையான சுற்றுச் சூழலை பாதுகாக்கும் சமுதாயத்தை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். இது பிற திட்டங்களுக்கு எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் இருக்கும்.

மேலும் விழாவில் கௌசிகா நீர்க்கரங்கள் தலைவர் செல்வராஜ், ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை ரோட்டரி கிளப் உறுப்பினர் சூர்யா குமாரி,ரோட்டரி மாவட்டம் 3201 உதவி கவர்னர் கவிதா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க