• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மகளிர் தினவிழா

March 8, 2018 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு  கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  எஸ்.என்.ஆர். கலையரங்கில்  மகளிர் தினவிழா கொண்டாப்பட்டது.

கல்லூரியின்  முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன்  தலைமையேற்ற  இவ்விழாவில் கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் தூய்மை இந்தியா திட்டத்தின் கோவை தூதர் தஸ்லிமா நஸ்ரின், கௌமார பிரசாந்தி அகாடெமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், பத்மஸ்ரீ . நானம்மாள்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய   கோயமுத்தூர் “பயோடா டெக்னாலஜிஸ் – ன் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைத்தலைவர்  விஜயலட்சுமி,

பொறுமை, நேர்மறை எண்ணங்கள், மன்னிக்கும் குணம் இன்றைய பெண்களுக்கு அவசியம் என்றும் இதனை கடைபிடிக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சாதிக்க இயலும்  எனக் கூறினார்.

இவ்விழாவில்   பத்மஸ்ரீ  நானம்மாளின்  யோகாசன செய்முறையும் நிகழ்த்தப்பட்டது. மேலும்,  மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் படிக்க