• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் ரூ.2.85 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

February 11, 2021 தண்டோரா குழு

கடந்த 1 ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்த 5 பயணிகளை , விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர்கள் 5 பேரும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 6318 கிராம் எடைக்கொண்ட பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, 5வரில் ஒருவர் பதற்றமாக இருந்ததை அறிந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 324 கிராம் எடைக்கொண்ட தங்கம் அடங்கிய 28 கேப்சூல்கள் விழுங்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மலக்குடலிலும், விழுங்கப்பட்ட கேப்சூல்கள் மூலம் மொத்தமாக 6642.4 கிராம் தங்கத்தை பல்வேறு வழிகளில் பிரித்தெடுத்ததில் ரூ.2.85 கோடி மதிப்பிலான 24கேரட் 5747 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மலக்குடலில், பைகளில், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் மட்டுமே கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி தங்கம் கடத்தி வரப்பட்டது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க