• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழித்தடத்தில் நியூஜல்பாய்குரி – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

December 21, 2021 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் மேற்கு வங்காளம் நியூஜல்பாய்குரி – திருவனந்தபுரம் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

டிசம்பர் 21, 28, ஜனவரி 4,11,18,25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நியூ ஜல்பாய்குரி நிலையத்தில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்: 05706) வியாழக்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தைச் சென்றடையும். அதேபோல், டிசம்பர் 24, 31 ஜனவரி 7,14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்:05705) திங்கள்கிழமை இரவு 12.10 மணிக்கு நியூ ஜல்பாய்குரி நிலையத்தைச் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள், கிஷாங்கஜ், மால்டா டவுன், ராம்பூர், பர்தமான், தங்குனி, காரக்பூர், பாலாசோர், பட்ராக், கட்டாக், புவனேஷ்வர், குர்டா சாலை, பெர்ஹாம்பூர், பாலஷா, ஸ்ரீகாகுளம் சாலை, விழியன்காரம், சாமல்கோட், ராஜமுந்திரி, ஏழூரு, விஜயவாடா, நெல்லூர், ரேனிகுண்டா, காட்பாடி,சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூர், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க