• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

December 4, 2020 தண்டோரா குழு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க குவிந்த தொண்டர்களால் கோவை விமான நிலையத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மத்திய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த திமுக தலைவர் ஸ்டாலினை காணவும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் முந்தியடித்து கொண்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் கொரோனா தொற்று காலத்தில் தனிமனித இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் முந்தியடுத்தி சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர். பின்னர் கட்சினரை பார்த்து கையசைத்தபடியே காரில் ஏறியவர் சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க