• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு மண்டலத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

September 2, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வரும் மையத்தை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பின்னர் மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்களா? என பார்வையிட்டார்.

தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டார்.பின்னர் பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க