• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரூ.53.80 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், வெள்ளி, மதுபாட்டில்கள், பரிசுபொருட்கள் பறிமுதல்

March 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் விதம் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் மூன்று குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதுபோலவே வீடியோ கண்காணிப்பு குழு ஒரு தொகுதிக்கு இரண்டு குழுக்கள் வீதம் 12 மணி நேரம் செயல்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர் தலைமையில் ஒரு சார்பு ஆய்வாளர், 2 காவலர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி வரை இதுவரை ரூ.4.55 கோடி ரொக்கம், ரூ.61.96 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களாக ரூ. 47.92 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ. 53.09 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவர்கள் சமர்ப்பித்த பின் மாவட்ட கண்காணிப்புகுழுவின் பரிந்துரையின் படி விடுவிக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க