• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

January 9, 2020 தண்டோரா குழு

கோவை ராஜவீதியில் 7 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை சார்பில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை ராஜவீதி பகுதியில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 7 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டு குடோனில் மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர்கள் நாகாராம், பேராராம், ரமேஷ், ஹரீஸ் தேவசீ ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க