வன்கொடுமை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சி.பி.எம் கட்சியினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு சி.பி.எம் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்,தந்தை பெரியார் திராவிட கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,
“கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தலித்கள் மீதான வன்கொடுமை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்கொடுமை நடைபெற்று வருகிறது.பீகார் உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இருந்தால் முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.அவர் அரசு அதிகாரியாக இருப்பின் அவரது உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னர் தான் கைது செய்ய வேண்டும் என்றும்,நீதிமன்றம் கருதினால் வழக்கு பதியப்பட்ட வழக்கு முன்ஜாமீன் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலித்கள் மீதான வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.எனவே உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனப்படி இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.அரசியல் சாசனத்தில் உள்ள ஒன்பதாவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு
’ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ மெகா டவுன்ஷிப் திட்டம் கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் தொடக்கம்
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்