• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை ரயில் நிலையத்தை சி.பி.எம் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

July 2, 2018 தண்டோரா குழு

வன்கொடுமை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சி.பி.எம் கட்சியினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு சி.பி.எம் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்,தந்தை பெரியார் திராவிட கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

“கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தலித்கள் மீதான வன்கொடுமை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்கொடுமை நடைபெற்று வருகிறது.பீகார் உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இருந்தால் முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.அவர் அரசு அதிகாரியாக இருப்பின் அவரது உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னர் தான் கைது செய்ய வேண்டும் என்றும்,நீதிமன்றம் கருதினால் வழக்கு பதியப்பட்ட வழக்கு முன்ஜாமீன் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலித்கள் மீதான வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.எனவே உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனப்படி இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.அரசியல் சாசனத்தில் உள்ள ஒன்பதாவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க