• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர தேசிய கொடி பறக்கவிடபட்டது

January 24, 2019 தண்டோரா குழு

கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 78 ரயில் நிலையங்களில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தென்னக ரயில்வேயில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது.

2 சுமார் டன் எடை கொண்ட கொடி கம்பமானது 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ரயில்நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடி 9.5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியக்கொடியை பறக்கவிடும் நிகழ்சசியில் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் படிக்க