• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை

August 13, 2020 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனைக் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில்வே உட்கோட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படை,மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 475 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு நேரமும் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.தண்டவாளத்தில் செல்பவர்கள் மீதும், தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க