• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

April 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டர் வரையிலும் பயன்பெறலாம்.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பாசன குழாய்கள் நிறுவ ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

மேலும் படிக்க