• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

April 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

தோட்டக்கலை துறையின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டர் வரையிலும் பயன்பெறலாம்.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பாசன குழாய்கள் நிறுவ ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

மேலும் படிக்க