• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் திடீர் ஆய்வு

November 14, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ஆலோசனை நடத்தினார்.

கோவை பாரதியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து, அமைச்சர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர்கள் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.

அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி குறித்து கேட்டறிந்த ஆளுநர்பன்வாரிலால் புரோகித், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்னும் எவ்வளவு நிதி தேவை என்றும் கேட்டதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித் கோவை மாவட்ட அரசுஅலுவலகங்களைப் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க