• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் மரம் வளர்ப்போம் மன்னுயிர் காப்போம் திட்டம் ஆரம்பம்

January 26, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட கிளை சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் திட்டம் வியாழனன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டத்தின் சார்பில் மழை வேண்டி கடந்த ஜனவரி 15ம் தேதி15க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் 15000 மக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வியாழன்று கோவை தெற்கு மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக “மரம் வளர்ப்போம் மண்ணுயிர் காப்போம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் கிளையின் தலைவர் அஷ்ரப் அபு சாலி தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட துணைத் செயலாளர் நசீர் அஹமத் கூறியதாவது:

“நாடு முழுவதும் சாலைகளை விரிவுபடுத்தவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அத்துடன் பருவமழை பொய்த்து, கடும் வறட்சியும், விவசாயிகளின் தற்கொலைகளும் டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழகமெங்கும் பரவி வருகிறது. இதுவரை 140 விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் வறட்சி மாநிலமாக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் (Global Warming) பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட ஆசாத் நகர் கிளை சார்பில் 500 நடும் விழா வியாழனன்று தொடங்கப்பட்டது. வெறும் மரக்கன்றுகள் மட்டும் நடாமல் ஒரு மரக்கன்றுக்கு 800 ரூபாய் செலவில் பாதுகாப்புக் கூண்டுகள் அமைத்து, அதனைப் பராமரிக்க இருக்கிறோம்”

இவ்வாறு நசீர் அஹமத் கூறினார்.

மேலும் படிக்க