• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்

February 24, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அடுத்த காளியாபுரத்தை சேர்ந்தவர்  அயவின் ஜோசப் மைக்கேல். இவர் தனது நிலத்தை சிலர் பறிக்க முயல்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்தார்.

அப்போது திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானம் அடையாத நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரியும் ஜீவா என்பவர் சாதுர்யமாக செயல்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மைக்கேலை மடக்கிப்பிடித்தார்.

இதையடுத்து அவரை மீட்ட போலீசார், முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

 

மேலும் படிக்க