February 24, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த காளியாபுரத்தை சேர்ந்தவர் அயவின் ஜோசப் மைக்கேல். இவர் தனது நிலத்தை சிலர் பறிக்க முயல்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்தார்.
அப்போது திடீரென தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானம் அடையாத நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரியும் ஜீவா என்பவர் சாதுர்யமாக செயல்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட மைக்கேலை மடக்கிப்பிடித்தார்.
இதையடுத்து அவரை மீட்ட போலீசார், முதலுதவி சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் சேர்த்தனர்.