August 28, 2020
தண்டோரா குழு
கோவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் வழங்கப்பட்ட அம்மனுவில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொகுதி வாரியாக உரிய சுகாதார பணியாளர்கள் நியமித்து அவர்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,மேற்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தேவையான அனைத்து ஒத்துழைப்பும்
நல்கி கொரோனா நோயை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருப்போம்.கொரோனா பாதிக்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களை முழுமையாக மூடவேண்டும் என்ற ஆணையை மறுபரிசீலனை செய்யுமாறும்
COVID-19 -ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை உரிய பாதுகாப்புடன்தனிமைப்படுத்தப்பட்டு எஞ்சியுள்ள தொழிலாளர்களை வைத்து நிறுவனங்களையும்,தொழிற்சாலைகளையும் உரிய சமூக இடைவெளி பாதுகாப்புடனும், மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தொடர்பான வழிமுறைகளையும் பின்பற்றி நிறுவனங்களை நடத்தி மற்ற தொழிலாளர்களின்
வாழ்வாதாரங்களையும்,நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின்நலன்களையும் கருத்தில் கொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்குமாறும் பணிவுடன் வேண்டுகிறோம் என மனுவில் கேட்டுக்கொண்டனர்.