• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

November 2, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.194.27 லட்சம் மதிப்பிலும், தொண்டாமுத்தூர் அருகே சுண்டாக்காமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.166.65 லட்சம் மதிப்பிலும்,சூலூர் அருகே கலங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.117.89 லட்சம் மதிப்பிலும், கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் நாளை காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்திலிருந்து நாளை திறந்து வைக்க உள்ளார்.

கோவை மாவட்டத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் படிக்க