• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் துவக்கி வைத்தார்.இதன் பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,முக கவசங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கபட்டது.

இது குறித்து ஒருங்கிணைபாளர்கள் கூறுகையில்,

கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று ஆட்டோக்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் உக்கடம், கரும்புகடை, குனியமுத்தூர், ஆத்துபாலம், சுந்தராபுரம்,செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளபட இருப்பதாக தெரிவித்தனர். இன்று மட்டும் ஐயாயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்க உள்ளதாகவும் மூவாயிரம் முக கவசங்கள் வழங்க உள்ளதாகவும் மேலும் தேவைபடும் மக்களுக்கு விநியோகம் செய்யபட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.

மேலும் படிக்க