• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி துவங்கியது

May 16, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகத்திலும் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி இன்று துவங்கியது.

1421 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிவானது கோவை வடக்கு,கோவை ற்கு,சூலூர்,மேட்டுப்பாளையம்,பொள்ளாச்சி,வால்பாறை உள்ளிட்ட அனைத்து அலுவலகத்திலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது.இதில் பட்டா மாறுதல்,நிலத்திற்கான எல்லை அளத்தல்,வயதோர்க்கான உதவி தொகை போன்ற வருவாய் துறைக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவிற்க்கு தீர்வு காணும் விதத்தில் ஜமாபந்திக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அவர்கள் துவக்கி வைத்தார்.இதில் அதிமுக மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் மற்றும் துணை தாசில்தார்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இதன் பின் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் படிக்க