• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் புதியதாக 6 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு விநியோகம்

February 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனுக்குடன் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி சுமார் 6 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.இதில் தற்போது வரை 6 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு பெற 10 லட்சத்து 17 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.இதில் 99 சதவீதம் பேருக்கு பெங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.

9 ஆயிரம் பேர் மட்டுமே பொங்கல் பரிசு வாங்காமல் உள்ளனர்.இவர்கள் இடம் பெயர்ந்து சென்றவர்களாக இருக்கலாம்.அல்லது பொங்கல் பரிசை வாங்க விருப்பம் இல்லாதவர்களாக இருக்கலாம்.பொங்கல் பரிசு உள்ளிட்டவற்றை வாங்க விருப்பம் இல்லாதவர்கள் இணையதளம் சென்று அதனை பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு செய்து உள்ளது. ஆனால் கோவையில் இதுவரை தனக்கு பொங்கல் பரிசு வேண்டாம் என்று யாரும் பதிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க