• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் நாளை 439 தடுப்பூசி முகாம்கள் – ஆட்சியர் தகவல்

September 25, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நாளை 439 தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 24.50 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 7.40 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற்றுள்ள 2 சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து, வரும் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமுக்காக 878 அங்கன்வாடி பணியாளர்கள், 439 தடுப்பூசி செலுத்துபவர்கள், 200 மேற்பார்வையாளர்கள் மற்றும் 65 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் 116 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 129 முகாம்களும், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் 43 முகாம்கள், மாநகராட்சி பகுதிகளில் 151 முகாம்கள் என மொத்தம் 439 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாமில் தடுப்பூசி செலுத்துவபர்களின் விவரங்கள், உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமை மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க