November 26, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது தக்காளி விலை சரிந்து கிலோ ஒன்றிற்கு ரூ.75 முதல் 80 வரை என்று உழவர் சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உழவர் சந்தையில் ஒரு நுகர்வோருக்கு 2 கிலோ தக்காளி என்ற அளவில் வழங்வதற்கும், சுப நிகழ்வுகளுக்கு நிர்வாக அலுவலரிடம் அழைப்பிதழுடன் முன் அனுமதி பெற்ற பின்னரே கூடுதல் அளவில் தக்காளி வழங்கிட வேண்டும் என உழவர் சந்தை அலுவலர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு கூடுதல் அளவில் விற்று, நுகர்வோர்களுக்கு தக்காளி கிடைக்க இயலாத பட்சத்தில் தங்களது உழவர் அட்டையை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விவசாயிகளுக்கு எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் தக்காளி வரத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யாமல் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வர அறிவுறக்கப்பட்டதால் உழவர் சந்தைகளின் மொத்த தக்காளி வரத்து அதிக ரித்து தக்காளியின் விலை மேலும் குறைய இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.