• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் நியமனம்

September 24, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையத்தால் மதிவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மதிவாணன் தலைமையில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் தொடர்பான அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடிகள் அமைப்பது, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவது, தேர்தல் விதிமுறைகளை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சமீரன், மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. அப்பகுதியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்க்கொண்டார்.

மேலும் படிக்க