• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர பகுதியில் ஊரடங்கு விதியை மீறுவோர்க்கு ரூபாய் 500 அபராதம் – துணை ஆணையர் பேட்டி

May 14, 2021 தண்டோரா குழு

கோவையில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளதாகவும், ஊரடங்கு விதியை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பதாகவும், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க