May 19, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று 60.39 சதவீதமாக உள்ளது. கடந்த வாரம் 67 சதவீதம் வரை அதிகரித்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்து உள்ள நிலையில், தொற்றுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும்
நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60.39 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில்
வசிக்கின்றனர்.இதற்கு அடுத்து சூலூர் பகுதியில் 9.79சதவீதம் பேர் உள்ளனர்.கோவை மாநகராட்சிக்கு அடுத்து சூலூர் பகுதியில்தான்
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்டத்திலேயே தொற்று பாதிப்பு குறைந்த இடமாக வால்பாறை உள்ளது. இங்கு 0.29சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.