• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று 60.39 சதவீதமாக உள்ளது

May 19, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று 60.39 சதவீதமாக உள்ளது. கடந்த வாரம் 67 சதவீதம் வரை அதிகரித்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்து உள்ள நிலையில், தொற்றுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும்
நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60.39 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில்
வசிக்கின்றனர்.இதற்கு அடுத்து சூலூர் பகுதியில் 9.79சதவீதம் பேர் உள்ளனர்.கோவை மாநகராட்சிக்கு அடுத்து சூலூர் பகுதியில்தான்
தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாவட்டத்திலேயே தொற்று பாதிப்பு குறைந்த இடமாக வால்பாறை உள்ளது. இங்கு 0.29சதவீதம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க