• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியை கண்டித்து 20ந்தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

November 7, 2019 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை இரத்து செய்ய வேண்டும், செயலற்று முடங்கி கிடக்கின்ற கோவை மாநகராட்சியை கண்டித்து 20ந்தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கூறியுள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 சதவீத வரி உயர்வை அமுல்படுத்தினர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை கண்டித்தும், சுகாதரமற்ற கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும், 100 சதவீத சொத்து வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 20 ந்தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற மாநகர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க