• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியின் வரைவு வார்டு, மறு வரையறையில் உள்ள குளறுபடிகளை தீர்க்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ – மாநகராட்சி ஆணையாளரிடம் மனு

January 17, 2018 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அறிவித்த வரைவு வார்டு மறு வரையறையில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.
அதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவீத வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு  சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பரிசீலனை செய்தி முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில், நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.

மேலும் படிக்க