• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டம் பள்ளி வகுப்பறைகள் கட்ட தனியார் நிறுவனம் ரூ.26 லட்சம் வழங்கல்

October 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சி.எஸ்.ஆர். நிதி வழங்கும் நிறுவனங்கள் அடிப்படை பணிகளுக்கு குறிப்பிட்ட நிதி அளித்தால், மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட நிதி பங்களிப்பு செய்யப்பட்டு மக்கள் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாநகராட்சி கிழக்கு மண்டலம் 57-வது வார்டு பகுதியில் உள்ள மசக்காளிபாளையத்தில் செயல்படும் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிறைவேற்ற உதவும் வகையில், கோவை சூலூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரூ.26 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘5 வகுப்பறைகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.5 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.55 லட்சம் வரை செலவாகும். இதற்கான செலவில் ரூ.26 லட்சத்தை தனியார் நிறுவனத்தினர் அளித்துள்ளனர்,’’என்றார்.

மேலும் படிக்க