• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சிக்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கல்

April 21, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுப்பதற்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு மேலும் புதிய 176 குப்பை தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர்கள் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இதிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க