• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தலைமறைவு

December 7, 2018 தண்டோரா குழு

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று தலைமறைவாகியுள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராணி, பத்மநாபன் தம்பதியினர். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15) ஸ்ரீஜா (10) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து பிள்ளைகளை வீட்டில் விட்டு செல்வராணி கோபித்து கொண்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து, காலை குழந்தைகளை பள்ளிக்கு தயார் படுத்தி அனுப்புவதற்காக வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். பத்மநாபன் வீட்டில் இல்லை. இதையடுத்து செல்வராணி சிங்காநல்லூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க