• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்

June 14, 2021 தண்டோரா குழு

தடகளம் மற்றும் பல்வேறு விளையாட்டு மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகளுக்கென
கொரோனா தடுப்பூசி முகாம் கோவை மண்டல பாரா ஒலிம்பிக் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பாரா ஒலிம்பிக் வீரர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.அவரது அறிவுறுத்தலின் படி கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் அமைந்துள்ள தமிழக பாரா ஒலிம்பிக் சங்கத்தின் கோவை மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முன்னதாக முகாமை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.இதில் தமிழக பாரா ஒலிம்பிக் சங்க துணை தலைவர் கிருபாகர் ராஜா மற்றும் கோவை மாவட்ட தலைவர் கன்னியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பாரா ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில் தடகளம் மற றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளி வீரர்,வீராங்கனைகள் பலர் முகாமில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த கொண்டனர்.

மேலும் படிக்க