• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆட்டோ டிரைவர் !

July 31, 2017 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட 60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், முனியப்பன் இன்று காலை சாலையில் செல்லும் போது ,முன்னே சென்ற இரு சக்கரவாகனத்தில் இருந்து பை ஒன்று தவறி விழுந்ததுள்ளது.

அதை முனியப்பன் எடுத்து பார்த்த போது அதற்குள் தங்கநகைகள் மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சக ஆட்டோ ஓட்டுநர்களிடன் கூறி,அந்த பையை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார். பையுக்குள் இருந்த நகையை மதிப்பீடு செய்த போது 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆனையர் அலுவலகத்திற்கு வரவழைத்த கோவை மாநாகர காவல் ஆனையாளர் அமல்ராஜ் பழனிச்சாமி தொலைத்த நகைகளுக்கான அடையாளங்களை கேட்டுள்ளார். இதில், முனியப்பன் ஒப்படைத்த நகைகளும் இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகரகாவல் ஆணையாளர் அமல்ராஜ் , அவரது நேர்மையை பாராட்டி தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க