• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போத்தனூர் டி-மார்ட் பல்பொருள் அங்காடிக்கு சீல் வைப்பு

June 22, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், கடைகளில் தனிமனித இடைவெளி, கட்டாய முகக்கவசம் என கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.இதனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வந்த டி-மார்ட் பல்பொருள் அங்காடியில் விதி மீறல் நடப்பதாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா, வருவாய்த்துறை அதிகாரிகள், போத்தனூர் போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்தால் டி- மார்ட் பல்பொருள் அங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க