May 13, 2020
தண்டோரா குழு
கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் 18 நாட்களுக்கு பின் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா ஈடுபட்டிருந்த போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீஸார் 7 பேருக்கு கொரோனா உறுதியானது.இதையடுத்து கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இரு காவல் நிலையங்களும் மூடப்பட்டது.இந்நிலையில் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.மேலும் 18 நாட்களுக்கு பின் போத்தனூர் காவல் நிலையம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று திறக்கப்பட்டத்து.
மேலும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்று வருகின்றனர்.புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கை கழுவவும்,சானிடைசர் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.