• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை புளியகுளத்தில் பீரில் குப்பைகள் இருந்ததால் மது பிரியர் அதிர்ச்சி

May 16, 2019 தண்டோரா குழு

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது பிரியர் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 – டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஜிங்காரோ பீர்ரினை வாங்கியுள்ளார். பின்னர் அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க