• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை புனித மைக்கல் தேவாலயத்தின் மறைமாவட்ட ஆயரை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 20, 2021 தண்டோரா குழு

கோவை புனித மைக்கல் தேவாலயத்தின் மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கரடிமடை பகுதியில் நேற்று தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில் சென்ற அவர், அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் இன்று காலை டவுன்ஹால் பெரிய கடைவீதியில் உள்ள புனித மைக்கல் தேவாலயத்துக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அங்கு மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்து பேசினார். அப்போது புனித மைக்கல் திருச்சபை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது அதிமுகவின் வடக்கு தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், கிணத்துக்கடவு வேட்பாளர் தாமோதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க