• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில்

March 28, 2023 தண்டோரா குழு

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பீகாரை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை-பீகார் இடையே வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கோவையில் இருந்து பீகார் மாநிலம் பராணிக்கு வாராந்தர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதன்படி வருகிற 5-ந் தேதி முதல் வாரத்தின் புதன்கிழமை தோறும் இரவு 12.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் (எண் 03358) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பீகார் மாநிலம் பராணி சென்றடையும். இந்த ரெயிலானது வருகிற 3.5.23 வரை இயக்கப்பட உள்ளது.

மறுமார்க்கமாக வருகிற 1-ந் தேதி முதல் பீகார் மாநிலம் பராணியில் இருந்து வாரத்தின் சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 03357) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயிலானது வருகிற 29.4.23 வரை இயக்கப்படும். இந்த ரயிலில் ஏ.சி.2 டயர் பெட்டிகள்-2, ஏ.சி. 3 டயர் பெட்டிகள்-4, தூங்கும் வசதி பெட்டிகள்-12, பொதுப்பிரிவு 2-ம் வகுப்பு பெட்டிகள் -4 இணைக்கப்பட்டு இருக்கும்.

இந்த சிறப்பு ரயிலானது ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எழுறு, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விழியங்கரம், ராயகடா, திட்டலகார், சம்பலூர், ஜார்சுடா, ரோர்கேலா, ஹத்தியா, ராஞ்சி, முறி, போகரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், பராக்கர், சித்தரஞ்சன், ஜமந்தரா, மதுபுர், ஜாஜ்ஹா, கியூல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க