September 22, 2020 தண்டோரா குழு
உலக ரோஸ் தினமானது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெலிண்டா ரோஸ் என்ற 12 வயது சிறுமி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு,கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு சார்பில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நோயாளிகளுக்கு ரோஜா மலரை கொடுத்து குணமடைய வாழ்த்து சொல்லும் ரோஜா தினம் 2020 இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் தொடங்கி வைத்தார்.
புற்றுநோய் சிகிச்சை பிரிவின் டாக்டர்கள் மதுலிகா விஜயகுமார்,ரூமேஷ் சந்தர், பாஸ்கர் பாண்டியன் ராவ்,புற்றுநோய் துறை இயக்குனர் பாலாஜி ஆகியோர் புற்றுநோய் நோயாளிகளுக்கு ரோஜா தினத்தினை முன்னிட்டு ரோஜா பூக்கள்,பழங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவர்கள் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.