June 3, 2021
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் தொற்று, கோவையை மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்த சவாலான தருணத்தில், கோவை நகர மக்களுக்கு உதவிட பிரிமியர் மில்ஸ் குழுமம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து பிரிமியர் பைன் லினன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி ஸ்ரீனிவாசன் கூறியதாவது :
கோவை நகர மக்களுக்காகவும், இங்கு குடியிருப்போரின் நலனுக்காகவும் இ.எஸ்.ஐ., மருத்துவனைக்கு 100 படுக்கைகள் ஆக்சிஜன் பெறும்வகையில்,பிரிமியர் மில்ஸ் குழுமம் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் வசதியடன் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.இந்த மாடுலர் அமைப்பு, இரண்டு தனித்தனி கம்ப்ரஷர்களை கொண்டது.
இது, பரவலாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டியுடன் இணைக்கப்பட்டு,ஒரேசமயத்தில் இரண்டு நோயாளிகளின் படுக்கைகள் ஆக்சிஜன் வசதிபெறும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனை நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாயத்திற்கு உதவவேண்டும் என்ற நோக்கில் நாங்கள், இந்த பொறுப்பினை மிக்க கவனமுடன் மேற்கொண்டு வருகிறோம்.மேலும் பல வழிகளில் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், கோவிட்சிகிச்சை மருத்துவமனைகள் போன்றவைகளுக்கும் மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகிறோம். எங்களது பிரிமீயர் மில்ஸ் குழுமம், கோவை நகருக்கும், மக்களுக்கும் தொடர்ந்து உதவிசெய்ய உறுதி பூண்டுள்ளது. “வாழ்வை காப்போம்” என்ற எங்களது உயரிய நோக்கத்தோடு பணியினை தொடர்வோம்.
மேலும் தங்களது குழுமம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தங்களது தொழிலாளர்களின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டுள்ளது. என்பதையும் தெரிவித்தார்.