April 10, 2019 தண்டோரா குழு
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவானது இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஏப்.18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெறுவதை ஒட்டி அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தவாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் தபால் வாக்குப்பதிவானது நடைபெறுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக கோவை பாராளுமன்றத் தொகுதியில் தபால் வாக்குப்பதிவானது கோவை அவிநாசி சாலையில் உள்ள csi பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பொருத்தவரை 980 காவலர்களும் 212 ஊர்காவல் படையினரும் என மொத்தம் 1205 பேருக்கு இங்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.