• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாராதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதி முன்பு மாணவிகள் போராட்டம்

August 30, 2022 தண்டோரா குழு

கோவை பாராதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் மாணவிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, பல்கலை. நுழைவு வாயில் முன் மாணவிகள் சாப்பாட்டு தட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழக மகளிர் விடுதியில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்தநிலையில், மகளிர் விடுதியில் வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளதாகவும், அவ்வப்போது உணவில் புழு, பூச்சிகள் கிடப்பதாகவும் புகார் எழுந்தது. இதேபோல், விடுதியில் தண்ணீர் சரிவர வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,இன்று காலை மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள் தரமான உணவை வழங்கக்கோரி சாப்பாடு தட்டு மற்றும் வாளிகளுடன் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது,விடுதி கேன்டீனில் வழங்கப்படும் உணவில் சில சமயங்கள் புழுக்கள் இருப்பதாவும்,சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர். எனவே விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வடவள்ளி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி, சுகாதாரமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடுதி மாணவிகள் போராட்டம் காரணமாக பாரதியார் பல்கலை.யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க