• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

October 12, 2021 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறை மற்றும் தேசிய சேவை திட்டம் சார்பாக இளைஞரின் எழுச்சி நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரத ரத்னா APJ அப்துல்கலாம் பேட்மிண்டன் ரோலிங் ட்ராபி போட்டிகள் நடைபெற்றது.இதில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் மாணவர்களுடன் பேட்மிண்டன் விளையாடி துவக்கி வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 128 அணிகளாக வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் 18வயதுக்கு உட்பட்டவர்கள்,40வயதிற்கு மேற்பட்டவர்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் உடற்கல்வி துறை தலைவர் மற்றும் பதிவாளர் முனைவர் முருகவேல்,துணை வேந்தர், பேராசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு மூலிகை முக கவசங்களை வழங்கினர்.இதில் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க