• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பாரதியார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் – கோவை நீதிமன்றம்

February 12, 2018 தண்டோரா குழு

லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  கணபதி பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அப்போது, இம்மனு மீதான விசாரணையை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தி வைத்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக கணபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   

மேலும் படிக்க