August 24, 2020
தண்டோரா குழு
தமிழகம் முழுக்க பிளஸ்-1 சேர்க்கை இன்று முதல் துவங்கியது. சேர்க்கை உறுதி செய்த உடன் பாடபுத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த 17ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் இனி வைக்கப்பட்டதால் மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் குறிப்பிட்டு சேர்க்கை விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர். இவர்களுக்கு இன்று முதல் செயற்கை உறுதி செய்யப்படுகிறது இதோடு அந்தந்த பாட பிரிவுக்கான புத்தகங்களை மாணவர்களிடம் விநியோகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான கற்பித்தல் நடைமுறைகள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவை தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பள்ளியில் மாணவிகளை சேர்க்கையும் அத்துடன் பாடப் புத்தகமும் வினியோகிக்கப்பட்டது.
ஆர்வத்துடன் மாணவிகள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.