• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நீதிமன்ற வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பொங்கல் விழா

January 10, 2020

கோவையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் படி தொடர்ந்து பனிரெண்டாவது ஆண்டாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம் தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன்,நிர்மலா தேவி,மற்றும் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக கோவை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சக்தி வேல் ,முதலாவது கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவையொட்டி நீதிமன்ற வளாகம் வாழை ,தென்னை ஓலைகள் மற்றும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தொடர்ந்து வழக்கறிஞர்கள் மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டன. பொங்கல் பொங்கியபோது வழக்கறிஞர்கள், ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்க முழங்கியும், குலவையிட்டும் மகிழ்ந்தனர்.இந்த விழாவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பார் கவுன்சில் உறுப்பினர் அருணாச்ச்சலம் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கனகராஜ்,தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க