• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

July 6, 2021 தண்டோரா குழு

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல், வாரத்தில் 4 நாள்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் ஜூலை 9 ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இதேபோல், ஜூலை 10 ஆம் தேதி முதல் சனிக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் திருப்பதி நிலையத்தில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, , திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க