• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

July 6, 2021 தண்டோரா குழு

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:

கோவை – திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல், வாரத்தில் 4 நாள்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் ஜூலை 9 ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இதேபோல், ஜூலை 10 ஆம் தேதி முதல் சனிக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் திருப்பதி நிலையத்தில் பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது, , திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க