• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஆராதனை

December 12, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலையில் உள்ள csi கிறிஸ்து நாதர் ஆலயத்தில்மெழுகுவர்த்தி ஆராதனை நடைபெற்றது.ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஆராதனையில் பிரார்த்தனை செய்து வந்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு சிறப்பு ஆராதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கிறிஸ்மஸ் விழா தற்போது இருந்தே களைகட்ட தொடங்கியது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் கிறிஸ்து பிறப்பு பற்றிய தேவ வாக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. முக்கியமாக மெழுகுவர்த்தி ஆராதனை நடத்தப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பின்னர் இயேசு பிறப்பு பற்றி வேத வாசிப்பு நடை பெற்றது.

மேலும் படிக்க