August 22, 2019
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் நேபாள நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேபாள நாட்டின் பரத்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் நியூபானே கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தனது ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் விடுதி காப்பலரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.